Sunday, June 14, 2009
Sunday, June 07, 2009
பசங்க - திரைப்பார்வை
சிறியவர்களை வைத்து பெரியவர்களுக்கு நல்ல பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். நல்ல படம் என்றாலும் இது சிறியவர்களின் குறும்புத்தனத்தை சற்று மிகைப்படுத்தி சொல்வதாகவே இருக்கிறது. என்ன இருந்தாலும் மணிரத்தினத்தின் ‘அஞ்சலி’ படம் அளவுக்கு இல்லை.
அன்புக்கரசன் கான்வென்டைவிட்டு கவர்மெண்ட் ஸ்கூலில் சேர்கிறான். அங்கு வாத்தியார் பிள்ளை ஜீவாதான் நாட்டாமை. அவனுக்கும் இவனுக்கும் நடக்கும் போர் தான் கதை. இவர்கள் இருவரின் வீடும் எதிர் எதிர். எனவே காமெடிக்கு பஞ்சம் இல்லை. அப்பாக்கள் மோதி கொள்கிறார்கள். ஆனால் அன்பின் சித்தப்பா மீனாட்சி சுந்தரம் - ஜீவாவின் அக்கா கோப்பெருந்தேவியின் போன் காதல் நல்ல கலகல. நல்ல அட்வைஸ்களும் உண்டு.
அளவான கேரக்டர்கள். நன்றாக நடித்திருக்கும் முழுமையான குழு. நீரோட்டமான கதையமைப்பு. சிறியவர்களின் அதிகப்படியான குறும்பை நீக்கி பார்த்தால் எனக்கென்னவோ பாஸ்மார்க்கை தாண்டிவிடும் படமாகத்தான் தெரிகிறது.
Another reivew in Rediff: http://movies.rediff.com/review/2009/may/01/pasanga-is-delightful.htm
Author : Babou at 6/07/2009 10:48:00 AM | 0 comments Links to this post
Tags: Movie Review
தோரணை = ரோதணை?
எழுதலாமா வேண்டாமா என்று நீண்ட நெடுநேரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். சரி எழுதி விடலாம் என்று தோன்ற இதோ என் தோரணையில் ’தோரணை’ திரைப்பார்வை.
சுமார் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனையே அம்மா கீதா நினைத்துக்கொண்டிருக்க அவரது இளைய மகன் விஷால் வந்தால் அண்ணனோடுதான் வருவேன் என்று சபதம் ஏற்று கிராமத்தில் இருந்து பட்டிணம் வருகிறார். வந்தவுடன் தாதா குரு ஒருவனை கொலை செய்வதை பார்க்கிறார். பிறகு பழைய சிறுவயது போட்டோ மூலம் ஸ்ரீமனை அண்ணன் என்று நினைத்து அவரை கொல்ல வரும் அதே குருவிடம் இருந்து காப்பாற்றுகிறார். அடித்து நொறுக்கி தலையில் கல்லை போடும் போது குருவின் மார்பில் அம்மா இட்ட சூட்டு வடுவை பார்த்து விஷாலுக்கு குருதான் அண்ணன் என்று புரிகிறது. பிறகு அண்ணன் குருவை அவன் எதிரணி தாதா பிரகாஷ்ராஜிடம் இருந்து காப்பாற்றி எப்படி கிராமம் போய் சேருகிறார் என்பதை மிகுந்த பொறுமை சோதிப்புக்களுக்கு பிறகு காட்டுகிறார்கள்.
1. பஞ்ச் டயலாக்குகளில் விஜய் படங்களை நினைவூட்டுகிறார் விஷால். ஆனால் எல்லோரும் பஞ்ச் டயலாக் பேசி சாகடிக்கிறார்கள்.
2. சந்தானம் காமெடியில் இரட்டை அர்த்த வசனம் ஏதும் இல்லை என்றாலும். ஜட்டி போடாத காமெடி, கிழவியை கிஸ் அடித்த காமெடி, ஆர்த்தி குண்டாய் இருப்பதை வைத்து காமெடி என்று மொத்தம் போர் ரகம்.
3. விஷால் சொந்த தயாரிப்பிலேயே இத்தனை சொதப்பல் எப்படி பண்ண முடிந்தது? ஒன்றும் பெறாத கதைக்கு இவ்வளவு பொருட்செலவா?
4. ஷ்ரேயா தனக்கு கொடுத்த நடிப்பைகூட நாடகதனமாகவே செய்திருப்பது சற்று எரிச்சல் அடைய செய்கிறது.
5. பிரகாஷ்ராஜுக்கு ஆப்பு வைக்கிறேன் என்ற பேர்வழியில் விஷால் செய்யும் சித்து விளையாட்டுக்கள் - சின்ன புள்ளதனமா இருக்கு.
6. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பல படங்களின் காட்சிகளை அங்கெங்கே சுருட்டி சொருகி இருப்பது தெரிகிறது. ஒக்காந்து யோசிக்க மாட்டாங்களோ?
மொத்ததில் ‘சன் டாப் டென்’ பாணியில் சொல்லவேண்டுமானால் ”தோரணை பார்ப்பவர்களுக்கு ரோதணை”
விஷால் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Another open review: http://indiablogs.searchindia.com/2009/05/30/thoranai-review-vile-trash
Author : Babou at 6/07/2009 10:16:00 AM | 0 comments Links to this post
Tags: Movie Review

